×

சேரன்மகாதேவியில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

வீரவநல்லூர், மார்ச் 31: சேரன்மகாதேவியில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலியானார்.
சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மனைவி ராமலெட்சுமி (60). இவரது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த ராமலெட்சுமி நேற்று மாலை வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ராமலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சேரன்மகாதேவியில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi ,Veeravanallur ,Muthuramalingam ,Ramaletsumi ,Cheranmakadevi ,Chandanamariyamman Temple Street ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு