×

மானூர் அருகே வாலிபர் மாயம்

நெல்லை, மார்ச் 31: மானூர் அருகேயுள்ள தெற்குவாகைகுளம் தெற்குதெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் மகராஜன்(35). கூலித்தொழிலாளியான இவருக்கு லட்சுமி(30) என்ற மனைவியும்
இரு குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

The post மானூர் அருகே வாலிபர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Walibar Mayam ,Manoor ,Nellai ,Arunachalam ,South Vagaikulam South Road ,Manur ,Maharajan ,Lakshmi ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது