×

தோட்ட உரிமையாளரை மிரட்டியவர் மீது வழக்கு

போடி, மார்ச் 31: திருச்சி கருமண்டபம் அசோக் நகரில் உள்ள மேற்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். தேனி மாவட்டம், போடி அருகே அணைக்கரைப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட சன்னாசிபுரம் செட்டு இளந்தோப்பை அடுத்து இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை போடி அணைக்கரைப்பட்டி காந்தி சிலை பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தோட்டத்திற்கு வந்த தர்மராஜ் மோட்டார் அறையில் மராமத்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஸ்கரன், தர்மராஜை அவதூறாக பேசியதுடன், அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துச் சென்றார். இது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் தர்மராஜ் புகார் அளித்தார். இதன்பேரில் பாஸ்கரன் மீது எஸ்ஐ ஜெயலட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தோட்ட உரிமையாளரை மிரட்டியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Dharmaraj ,West Street ,Trichy Karumandapam Ashok Nagar ,Sannasipuram ,Amakaraipatti ,Bodi, Theni district ,Dinakaran ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்