×

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹92 ஆயிரம் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 31: தேன்கனிக்கோட்டை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹92 ஆயிரத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி சாலையில் அந்தேவனப்பள்ளி கிராமம் அருகே, பறக்கும் படை அதிகாரி சுபாசினி தலைமையிலான குழுவினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர், உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹92 ஆயிரம் வைத்திருந்தார். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை குழுவினர், அதை தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், உதவி தேர்தல் அலுவலர் குமரனிடம் வழங்கினர். அவர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தை திரும்ப பெற்று கொள்ளும்படி சரத்குமாரிடம் தெரிவித்தார்.

The post உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹92 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Anthevanapalli ,Dhenkanikottai - Anchetty road ,Subhasini ,Dinakaran ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு