×

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: நேற்று மாலை செய்தி தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி. நேற்று காலை செய்தி அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும். மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது 8 நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்? ஒருபக்கம் கண்ணை குத்தி கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ் பாசம்?.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன? கருப்பு பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு! விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்பு படையினர் இல்லை. “எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவல சாதனை, தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்.

The post மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,M.K.Stalin ,Twitter ,CM ,Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...