×

ஏப்.19 முதல் ஜூன் 1ம் தேதி வரை கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட தடை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதோடு சேர்ந்து ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தலும், 12 மாநிலங்களில் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கும் நாள் முதல் கடைசி கட்டத் தேர்தல் முடிவடையும் ஜூன் 1ம் தேதி மாலை 6.30 மணி வரை வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தேர்தல் பிரசாரம் ஓய்ந்தபிறகு எந்த கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

The post ஏப்.19 முதல் ஜூன் 1ம் தேதி வரை கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட தடை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,Lok Sabha ,Andhra ,Arunachal ,Odisha ,Sikkim ,
× RELATED 2 கட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை...