×

கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் மனு அளித்துள்ளார். சம்பவம் நடந்து 20 மாதங்கள் கடந்தும், மாணவியின் தாய், வன்முறையை தூண்டியவர்கள் எவரையும் விசாரணை செய்யவில்லை. பள்ளி தாளாளர் ரவிக்குமார் மனுவுக்கு ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவு அளித்துள்ளது.

The post கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kaniamoor ,Madras HC ,CHENNAI ,Madras High Court ,Investigation Team ,Kaniyamoor ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...