×

காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ

 

காங்கயம், மார்ச் 29: காங்கயம்‌ அருகே ரோட்டோர புதரில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.  கோடை வெயில் கொளுத்த தொடங்‌கிய சூழ்நிலையில் புற்கள் கருகிப்போன மேய்ச்சல் நிலங்களிலும் ரோட்டோரங்களில் சருகுகள் பரவிக்கிடக்கும் முற்புதர்களிலும் அவ்வப்போது தீ பிடிப்பது தொடர்கிறது. இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் காங்கயம் தாராபுரம் ரோட்டில் வட்டமலை அருகே வட்டமலைக்கரை பாலம் அடுத்துள்ள ரோட்டோர பகுதியில் வளர்ந்து நின்ற வேலிகாத்தான் முற்புதரில் திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதுகுறித்து அப்பகுதியினர் காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் ளித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்‌து, மேலும் பரவாமல் தடுத்து பின்னர் முழுமையாக அணைத்தனர். யாரோ அந்த வழியாக சென்றவர்கள் புகை பிடித்துவிட்டு வீசிச்சென்ற பீடியால் இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது. வெயில் காலங்களில் ரோட்டோரங்கள், பொது வெளிகளில் நின்று புகை பிடிப்போர் எஞ்சிய பீடி, சிகரெட்டுகளை முழுமையாக அணைத்து விட்டு வீசிச்செல்ல வேண்டும் என தீயணைப்புத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Rotora ,Gangayam ,Dinakaran ,
× RELATED வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்