×

வயநாட்டில் ராகுல் ஏப்ரல் 3ம் தேதி வேட்பு மனு தாக்கல்

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ஏப்ரல் 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். கேரளாவில் ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜ உள்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்பட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் இன்று (28ம் தேதி) முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ராகுல் காந்தி கடந்த முறை அமோக வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் இம்முறை மீண்டும் போட்டியிடுகிறார். அவர் ஏப்ரல் 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதற்காக அன்று காலை வயநாடு மாவட்டம் கல்பெட்டாவுக்கு வரும் ராகுல் காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அன்று மாலையே அவர் திரும்பிச் செல்கிறார்.

The post வயநாட்டில் ராகுல் ஏப்ரல் 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Wayanad ,Thiruvananthapuram ,Rahul Gandhi ,Kerala ,Congress ,Communist ,BJP ,Dinakaran ,
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...