கொல்கத்தா: கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் டாக்ஸியில் சென்று கொண்டிருந்த IndiGo Airbus A320neo விமானம் (VT-ISS) நிறுத்தப்பட்டிருந்த AI எக்ஸ்பிரஸ் B737 விமானத்தின் மீது (VT-TGG) மோதியது. ஆய்வு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக விமானம் வாயிலுக்குத் திரும்பியது.
இதன் விளைவாக கொல்கத்தா மற்றும் தர்பங்கா இடையே இண்டிகோ விமானம் 6E 6152 தாமதமானது. நெறிமுறையின்படி, ஆய்வு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக விமானம் விரிகுடாவுக்குத் திரும்பியது.
கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது போல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தர்பங்காவில் இருந்து வந்த இண்டிகோ விமானம் வந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. ஓடுபாதையில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் மீது இண்டிகோ விமானம் மோதுவது போல் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விமானியின் சாதுர்யத்தால் இண்டிகோ – ஏர் இந்தியா விமானங்கள் மோதல் தவிர்க்கப்பட்டு இறக்கைகள் மட்டும் லேசாக சேதம் அடைந்துள்ளது. விமானியின் சாதுர்யத்தால் இண்டிகோ விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட 300 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். 2 விமானங்கள் மோதியது தொடர்பாக விரிவான விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு அளித்துள்ளது.
The post கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது போல் வந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.