×

கார்-லாரி மோதல்; சென்னையை சேர்ந்தவர் பலி

மதுராந்தகம்: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் (65), இன்று திருச்சியில் நடைபெறும் உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க, தனது குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேருடன் சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். இக்காரை அதே பகுதியை சேர்ந்த ஒப்பந்த டிரைவர் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை பகுதியில் காலை 6 மணியளவில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி, சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு கார் எதிர்பக்கமாக பாய்ந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி வந்த கனரக லாரிமீது வேகமாக மோதியது. இதில் அந்த காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

இவ்விபத்தில், லோகநாதன் காரின் இடிபாடுகளில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், காரில் இருந்த அவரது உறவினர் பெண் உள்பட 3 பேர் மற்றும் டிரைவர் ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கார்-லாரி மோதல்; சென்னையை சேர்ந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Bali ,Chennai ,Loganathan ,Kolathur ,Trichy ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...