- தந்தையுதபாணி சுவாமி திருவீத்தியுல
- செட்டிக்குளம்
- Padalur
- தெரோதம்
- பங்கூனி உத்ரா விழா
- ஆலத்தூர் தாலுகா
- பெரம்பலூர் மாவட்டம்
- சுவாமி
- செங்குந்தர் மண்டபம்
பாடாலூர், மார்ச் 27: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து இரவில் தீர்த்தவாரி, கொடியிறக்குதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி செங்குந்தர் மண்டபம் வந்தடைந்தார். நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இரவில் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் வீதி உலா மலையடிவாரத்தில் உள்ள செங்குந்தர் மண்டபம் முன்பு தொடங்கி செட்டிகுளம் முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவின் போது பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்காய், வாழைப்பழம் போன்ற பொருட்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தார்.
The post செட்டிகுளத்தில் மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி சுவாமி திருவீதியுலா appeared first on Dinakaran.