×

மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு

தர்மபுரி, மார்ச் 27: பாலக்கோடு புதுப்பட்டாணியர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி பழனியம்மாள் (55). இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம், பழனியம்மாள் இரவு உணவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ₹15ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Perumal ,Palaniammal ,Pudupattaniyar Street, Palakod ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி