×

20 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை மோடி, மோடி என்று கோஷமிடும் இளைஞர்கள் கன்னத்தில் ‘பளார்’: கர்நாடக அமைச்சர் ஆவேசம்

பெங்களூரு: மோடி..மோடி.. என்று கோஷம் எழுப்பும் மாணவர்கள், இளைஞர்களின் கன்னத்தில் அறைய வேண்டும் என்று அமைச்சர் சிவராஜ் தங்கடகி ஆவேசமாக கூறினார். கர்நாடக மாநிலம் கொப்பளில் காங்கிரஸ் செயல்வீரர்கள் குழு கூட்டம் நடந்தது. இதில் கன்னட கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கலந்து கொண்டு பேசியதாவது, ‘ஒன்றிய மோடி அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

பத்தாண்டில் இதுவரை பாஜ 20 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்க வேண்டும் ஆனால், இப்போது, வேலையில்லா பட்டதாரிகள் பக்கோடா போட்டு விற்க வேண்டும் மோடி கூறுகிறார். வளர்ச்சி திட்டங்கள் எதையும் செய்யாமல் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகேட்க வருவதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். இனி எந்த மாணவனாவது, இளைஞனாவது மோடி..மோடி என்று கோஷம் எழுப்பினால் அவனது கன்னத்தில் பளார் என்று அறைய வேண்டும்’ என்றார்.

The post 20 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை மோடி, மோடி என்று கோஷமிடும் இளைஞர்கள் கன்னத்தில் ‘பளார்’: கர்நாடக அமைச்சர் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Karnataka ,Minister Avesam ,Bengaluru ,Minister ,Shivraj Thangadagi ,Congress ,Koppal, Karnataka ,Minister of Kannada Culture and Cultural Affairs ,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு