×

திருப்பதி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய எஸ்பி

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினருடன் ஹோலி பண்டிகையை எஸ்பி கிருஷ்ணகாந்த் பட்டேல் கொண்டாடினார். திருப்பதி மாவட்டத்திற்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை ஹோலி பண்டிகை ஒட்டி அவர்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் திருப்பதி மாவட்ட காவல்துறை எஸ்பி கிருஷ்ணகாந்த் பட்டேல் பாதுகாப்பு படை வீரர்களுடன் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடினார்.

வண்ண பொடிகள் தூவி இனிப்புகள் அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது எஸ்பி பேசியதாவது: மத்திய பாதுகாப்பு படையினர் தங்கள் குடும்பத்தை விட்டு நாட்டின் நலனுக்காக பல்வேறு பகுதிகளில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் கடமையை போற்றும் வகையிலும் குடும்பத்தினர் உடன் கொண்டாட முடியாத நிலையில் இங்கு போலீஸ் குடும்பத்துடன் இணைந்து பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய எஸ்பி appeared first on Dinakaran.

Tags : SP ,Holi ,Central Security Forces ,Tirupathi district ,Tirupathi ,Krishnakanth Patel ,Tirupati district ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை