×

கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருவொற்றியூர்: சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று முன்தினம் ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலை அருகே உள்ள பூங்காவில் ஓட்டேரி போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (23), சசிகுமார் (27), கிஷோர் (24), சாமுவேல் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து புளியந்தோப்பு பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Assistant Commissioner ,Tamarindo Raja ,Otteri ,Otteri New Barons ,Dinakaran ,
× RELATED ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத...