×

மது பதுக்கி விற்ற வாலிபர் கைது

 

தர்மபுரி, மார்ச் 25: தர்மபுரி அருகே மது பதுக்கி விற்ற வாலிபரை கைது செய்த போலீசார், 53 மது பாட்டில் மற்றும் டூவீலரை கைப்பற்றினர்.தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சி.மோட்டூப்பட்டி புளுதிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் டூவீலருடன் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். இதைத்தொடர்ந்து போலீசார் ஒருவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(37) என்பதும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து 53 மது பாட்டில்கள் மற்றும் டூவீலர் கைப்பற்றப்பட்டது. மேலும், தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

 

The post மது பதுக்கி விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Krishnapuram ,inspector ,Selvaraj ,C.Mottupatti Plutikkarai ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்