×

கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்த 4 சமாஜ்வாடி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: காக்கவா அல்லது வேவு பார்க்கவா?

லக்னோ: கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்த சமாஜ்வாடி எம்எல்ஏக்கள் 4 பேருக்கு உ.பியில் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  உ.பி பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை தேர்வு செய்ய அண்மையில் நடந்த தேர்தலில் எம்எல்ஏக்கள் 7 பேர் கட்சி மாறி வாக்களித்தனர். சமாஜ்வாடி கட்சியினர் சிலர் பாஜவுக்கு வாக்களித்ததால் அக்கட்சியின் வேட்பாளர் தோல்வி அடைந்தார். பாஜ வேட்பாளர் எதிர்பாராத வெற்றி அடைந்தார்.

இந்தநிலையில், பாஜவுக்கு ஆதரவாக வாக்களித்த சமாஜ்வாடி எம்எல்ஏக்கள் 4 பேருக்கு உ.பியில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு திடீரென ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் 8 பேர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இது உண்மையிலேயே பாதுகாப்பதற்காகவா? அல்லது அவர்களை 24 மணி நேரமும் வேவு பார்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையா? என்று சமாஜ்வாடி கட்சியினர் சமூக வலை தளங்களில் வெளியிட்ட பதிவுகளில் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

The post கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்த 4 சமாஜ்வாடி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: காக்கவா அல்லது வேவு பார்க்கவா? appeared first on Dinakaran.

Tags : Samajwadi ,BJP ,Kakkava ,Vevu Parva ,Lucknow ,UP Assembly ,Rajya Sabha.… ,vevavu ,Dinakaran ,
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு