×

டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது

 

திருப்பூர், மார்ச் 24: திருப்பூர், கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு மினி பஸ்கள் சென்று வருகிறது. இந்நிலையில், 2 மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மட்டும் அடிக்கடி டைமிங் பிரச்னை காரணமாக பஸ் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை தெற்கு போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று பலமுறை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று இவர்களுக்குள் மீண்டும் டைமிங் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து மினி பஸ் டிரைவர், கண்டக்டர்களான கார்த்திக் (27), சுப்புராஜ் (31), பார்த்தசாரதி (30), கார்த்திக் (25) ரமேஷ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

The post டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,M. Karunanidhi ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...