×

கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது

 

தொண்டி,மார்ச் 24: அறந்தாங்கியில் இருந்து கடத்தி வரப்பட்ட அரசு பேருந்து தொண்டி அருகே கனரக வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கியது. கடத்தியவர் பற்றி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். அறந்தாங்கி அரசு பஸ் டெப்போவின் வெளியே நிறுத்தி இருந்த அரசு பஸ்சை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் கடத்தி கொண்டு வேகமாக கிழக்கு கடற்கரை சாலையில் வந்துள்ளார். நேற்று அதிகாலை தொண்டி அருகே வட்டிணம் பகுதியில் வரும் போது எதிரே வந்த கனரக வாகனத்தில் நேருக்கு நேர் அரசு பஸ் மோதியுள்ளது.

இதில் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றி வந்த கனரக வாகன டிரைவர் முனியசாமி(37) கால் முறிந்தது. அரசு பஸ்சை ஒட்டி வந்தவர் தப்பி ஓடி தலைமறைவானார். விபத்தில் சிக்கியது குறித்து டெப்போ அதிகாரிகளிடம் எஸ்.பி.பட்டினம் போலீசார் கூறியதும் தான் பஸ் கடத்தப்பட்டதே தெரிய வந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது பஸ்ஸை மர்ம நபர் எடுத்துச் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து எஸ்.பி.பட்டிணம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

The post கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Thondi ,Aranthangi ,Arantangi government ,
× RELATED தொண்டி பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க தண்ணீர் தடாகம் அமைக்க கோரிக்கை