×

புன்னம் சத்திரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

வேலாயுதம்பாளையம், மார்ச்23: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் எஸ்ஐ கருணாநிதி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பெரிய ரெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி மனைவி வசந்தா(65) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புன்னம் சத்திரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Sonnam Satram ,VELAYUTHAMPALAYAM ,PUNNAM SATRAM ,KARUR DISTRICT ,SI Karunanidhi ,Sunnam Satram ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்