×

கீரை பனீர் புலாவ்

தேவையானவை:

பாலக் கீரை – 1 கட்டு,
பாஸ்மதி அரிசி – 1 கப்,
பனீர் – ½ கப்,
தேங்காய்ப்பால் – 1 கப்,
வெங்காயம் – 2,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
எண்ணெய், நெய் – தேவைக்கு,
சோம்பு, சீரகம் – தலா ½ டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை – 2,
வெள்ளை மிளகு தூள் – ½ டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

சுத்தம் செய்த பாலக் கீரையை நீருடன் 4 நிமிடங்கள் கொதிக்க விட்டு, ஆறியவுடன் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு, பிரிஞ்சி இலை, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். களைந்த பாஸ்மதி அரிசியை சேர்த்து வதக்கி, பாலக்கீரை விழுது, தேங்காய்ப்பால் சேர்ந்து நன்கு கலந்து குக்கரை மூடி விட்டு 2 விசில் விட்டு அணைத்து ஆறிய பின் குழந்தைகளுக்கு ருசியான பனீர் புலாவ் ரெடி.

The post கீரை பனீர் புலாவ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…