×

ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60 சவரன் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

தண்டையார்பேட்டை: ராயபுரம் சிமெண்ட்ரி சாலை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை அருகே நேற்று மாலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராயபுரம் வீராச்சாமி தெருவைச் சேர்ந்த ஹரிஷ் (47) என்பவர் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவரை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணம் இன்றி சுமார் 60 சவரன் எடையுள்ள 36 தங்கச் செயின்களை ஹரிஷ் வைத்திருந்தார்.

ஆனால், உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள், நகைகளை பறிமுதல் செய்தனர். பெரம்பூர்: சென்னை பேசின் பிரிட்ஜ் ஹஜ் கமிட்டி அருகே, நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மொபட்டை நிறுத்தி, அதன் பெட்டியில் சோதனை செய்தபோது ரூ.67 ஆயிரம் இருந்தது. விசாரணையில், கொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த உத்தம் (28) என்பது தெரிந்தது. உரிய ஆவணமில்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

The post ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60 சவரன் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Rayapuram ,Thandaiyarpet ,Flying Squad ,Cementary ,Road ,RSRM Hospital ,Harish ,Veerachami Street ,Honda ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...