×

சென்னையில் பள்ளி படிப்புக்காக வீட்டில் ஆராய்ச்சி செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பள்ளி படிப்புக்காக வீட்டில் ஆராய்ச்சி செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தார். கொளத்தூர் குமரன் நகரில் 12-ம் வகுப்பு மாணவர் ஆதித்யா பிரணவ் ரசாயனம் வைத்து ஆராய்ச்சி செய்துள்ளார். ரசாயனம் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்தார். மாணவரின் வீட்டில் ரசாயனம் வெடித்து தீப்பற்றியதில் அடுத்தடுத்து உள்ள வீடுகளின் சுவர்களும் இடிந்தன.

The post சென்னையில் பள்ளி படிப்புக்காக வீட்டில் ஆராய்ச்சி செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aditya Pranav ,Kolathur Kumaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...