×

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நன்றாக குட்டு வைத்துள்ளது.. இவ்வளவு மோசமான ஆளுநரால் இனி என்னென்ன எல்லாம் நடக்கும்?: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நன்றாக குட்டு வைத்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்பு அளித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ. பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் என்ன நடவடிக்கை பாயும் என இப்போது தெரிவிக்க முடியாது என்றும், பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவு எடுத்து தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றம் உரிய அரசியல் சாசன அடிப்படையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் ஆளுநரை கடுமையாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்ததற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்பு அளித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாட்டில் இவ்வளவு மோசமான ஆளுநரால் இனி என்னென்ன எல்லாம் நடக்கும்? என கேள்வி எழுப்பினார். மேலும், போதைப்பொருள் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்குதான் தொடர்பு உள்ளது; எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பதவிப் பிரமாணம் நடைபெறுவதில் தேர்தல் விதிமீறல் எதுவும் இல்லை; அரியானாவில் ஏற்கனவே 8 பேர் பதவியேற்றுள்ளனர். ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நன்றாக குட்டு வைத்துள்ளது என்று அவர் கூறினார்.

The post ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நன்றாக குட்டு வைத்துள்ளது.. இவ்வளவு மோசமான ஆளுநரால் இனி என்னென்ன எல்லாம் நடக்கும்?: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister ,Raghupathi ,Pudukottai ,Law ,DMK ,Governor ,Ravi ,Ponmudi ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...