×

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

 

விருதுநகர், மார்ச் 21: விருதுநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் பழைய பஸ் நிலைய வளாகத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலைக்குழுவினர் பொம்மலாட்டம் மூலமாக மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீடித்த நிலையான வாழ்வியல் முறைகள், காற்று மாசு தவிர்த்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

The post சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Tamil Nadu Department of Environment and Climate Change ,Virudhunagar Old Bus Station ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...