×

சிட்டுக்குருவி தினம் அனுசரிப்பு

 

ஈரோடு, மார்ச் 21: யூத் ஹாஸ்டல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா ஈரோடு கொங்கு கிளையின் சார்பில் வேப்பம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், நீர் தினம், கவிதை மற்றும் மகிழ்ச்சி தின நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி தலைமை வகித்தார். யூத் ஹாஸ்டல்ஸ் மாநில துணைத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். மாணவி இனியா வரவேற்றார். இதில், மாணவி பவி உலக சிட்டுக்குருவி தினம் குறித்து உரையாற்றினார். சர்வதேச நீர்தினம் குறித்து மாணவன் ஹரி, சர்வதேச மகிழ்ச்சி தினம் குறித்து ஆசிரியை ப்ரஸில்லா மற்றும் சர்வதேச கவிதை தினம் குறித்து ஆசிரியை ஜெயசுந்தரி ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 23 மாணவ, மாணவிகளுக்கு கிளையின் செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் யூத் ஹாஸ்டல்ஸ் சேர்மன் டாக்டர் ஐயப்பன், கிளைப் பொருளாளர் மஹேந்திரன், நிர்வாகி சூர்யா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளையின் தலைவர் பேராசிரியை சந்திரா தங்கவேல் மற்றும் பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.

The post சிட்டுக்குருவி தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Sparrow Day ,Erode ,World Sparrow Day ,Water Day ,Happiness Day ,Vepampalayam Government Primary School ,Youth Hostels Association of India Erode Kongu Branch ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...