×

2.5 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் காட்பாடியில் 2 பேர் கைது பீகாரில் இருந்து கொண்டு வந்த

வேலூர், மார்ச் 21: பீகாரில் இருந்து கொண்டு வந்த இரண்டரை கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்து 2 பேரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். காட்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக காட்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்து கொண்டு இருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த குஞ்சன்குமார்(21), மணீஷ்குமார் (21) என்பதும், அவர்கள் பீகாரிலிருந்து கஞ்சா சாக்லெட் வாங்கி கொண்டு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த இரண்டரை கிலோ கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்தனர். இருவரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

The post 2.5 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் காட்பாடியில் 2 பேர் கைது பீகாரில் இருந்து கொண்டு வந்த appeared first on Dinakaran.

Tags : Gadbadi ,Bihar ,Vellore ,Katpadi police ,Gadbadi police ,Dinakaran ,
× RELATED காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில்...