×

வேடசந்தூர் அருகே கிணற்றில் விழுந்த முதியவர் பலி

வேடசந்தூர், மார்ச் 21: வேடசந்தூர் அருகே உள்ள முருநெல்லிகோட்டையை சேர்ந்தவர் சென்னப்பன் (80) விவசாயி. இவரும் அவரது மனைவி கணேஷ்வரியும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.நேற்று அதிகாலை வீட்டிலிருந்து முருநெல்லிகோட்டைக்கு சென்று பால் வாங்கி வருவதற்காக சென்னப்பன் வந்துள்ளார். மீண்டும் அவர் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் அனைத்து இடங்களிலும் தேடினர். அப்பொழுது சாலையின் ஓரத்தில் ஆண்டியப்பன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சென்னப்பன் விழுந்து மிதந்து கொண்டிருந்தார். தகவலறிந்து வந்த வேடசந்தூர் தீயணைப்புத்துறை வீரர்கள் இறந்தவரின் உடலை மீட்டனர். வேடசந்தூர் போலீசார் அவரது உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

The post வேடசந்தூர் அருகே கிணற்றில் விழுந்த முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Chennappan ,Murunellikottai ,Ganeshwari ,Chennapan ,Dinakaran ,
× RELATED கிணற்றில் விழுந்த மயில் மீட்பு