×

நாட்டு துப்பாக்கி பதுக்கியவர் கைது

தேன்கனிக்கோட்டை, மார்ச் 21: தேன்கனிக்கோட்டை அருகே, விலிமுத்திரம் கிராம பகுதியில் நேற்று எஸ்ஐ பட்டு மற்றும் போலீசார், குற்றத்தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காடுசிவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் முனிராஜ்(25) என்பவர், அப்பகுதியில் உள்ள நர்சரி தோட்டத்தில், கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், அவரது தோட்டத்தில் சோதனை செய்தனர். அப்போது, புதரில் மறைத்து வைத்திருந்த, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். உரிய அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த முனிராஜை கைது செய்தனர். விசாரணையில் முயல், மான் வேட்டையாட வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முனிராஜை, தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post நாட்டு துப்பாக்கி பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,SI Pattu ,Vilimutram ,Venkatesan ,Muniraj ,Kadushivanapally ,Dinakaran ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு