×

வளர்ப்பு நாயை கடித்து கொன்றதால் காரில் வந்து 20 தெருநாய்களை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது

திருமலை: வளர்ப்பு நாயை கடித்து கொன்றதால் சொகுசு காரில் வந்து 20 தெருநாய்களை சுட்டுக்கொன்ற 3 பேரை சிசிடிவி காட்சிகள் மூலம் ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பரூக் நகர் மண்டலம் கோடுபள்ளியை சேர்ந்தவர் மந்தா நரசிம்ம ரெட்டி. இவர் ஐதராபாத்தில் உள்ள ரெட் ஹில்ஸில் வசித்து வருகிறார்.

இவரது மாமியார் வீடான மெஹபூப்நகர் மாவட்டம் அட்டகுல மண்டலம் பொன்னகல் கிராமத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றார். அப்போது வீட்டில் வளர்த்து வந்த டச்ஷண்ட் இனத்தைச் சேர்ந்த இரண்டு செல்ல நாய்களை அழைத்து சென்றார். அப்போது கிராமத்தில் இருந்த தெருநாய்கள் அவரிடம் இருந்த நாய்களை கடித்தது. இதில் ஒரு நாய் இறந்த நிலையில் மற்றொரு நாய் காயமடைந்தது. இதனால் கவலையடைந்த நரசிம்மா ரெட்டி பலக்னுமாவை சேர்ந்த தனது நண்பர்களான தாரிக் அகமது மற்றும் முகமது தாஹர் ஆகியோரிடம் தெரிவித்தார்.

பின்னர் பிப்ரவரி 15ம் தேதி அவர்களுடன் தனது சொகுசு காரில் துப்பாக்கியுடன் நரசிம்ம ரெட்டி நண்பர்களுடன் பொன்னகல் கிராமத்திற்கு சென்றார். அன்றைய தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் 3 பேரும் சேர்ந்து அந்த கிராமத்தில் இருந்த 20 தெருநாய்களையும் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுகுறித்தபுகாரின் பேரில் சொகுசு காரில் வந்தவர்கள் தான் தெரு நாய்களை சுட்டுக்கொன்றனர் என்பதை அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து சொகுசு கார் பதிவு எண் மூலம் ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் நேற்று முன்தினம் நரசிம்ம ரெட்டி உட்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, 6 செல்போன்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மெஹபூப்நகர் மாவட்ட எஸ்பி ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

The post வளர்ப்பு நாயை கடித்து கொன்றதால் காரில் வந்து 20 தெருநாய்களை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Rangareddy District ,Baruch Nagar Zone ,Kotupalli, Telangana State ,
× RELATED மருந்து கம்பெனியில் பயங்கர தீ; 50...