×

வெறிநாய்கள் கடித்ததில் 27 ஆடுகள் பலி

 

சேந்தமங்கலம், மார்ச் 20: சேந்தமங்கலம் ஒன்றியம், அக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன்(48), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடு-மாடுகளை வளர்த்து வருகின்றார். நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு பின்பு சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை தோட்டத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை சென்று பார்த்தபோது, 27 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன. அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் நள்ளிரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியதில் ஆடுகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறையினருக்கு கருப்பண்ணன் தகவல் தெரிவித்தார். இதன்பேரில், அங்கு வந்த மருத்துவக்குழுவினர் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சையளித்தனர்.
வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், நாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெறிநாய்கள் கடித்ததில் 27 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Karuppannan ,Akyambatti ,Senthamangalam Union ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை