×

இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதற்காக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (21ம் தேதி) காலை 10 மணியளவில் திருவள்ளூர், ஜெஎன் ரோட்டில் ஆயில் மில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளரான எனது தலைமையில் நடக்கிறது.

தலைமை செயற்குழு உறுப்பினர் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வரவேற்கிறார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை.சந்திரசேகர் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தளபதி சுந்தர், மதிமுக மாவட்டச் செயலாளர் மு.பாபு,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் ரத்துல்லா, மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் தணிகைவேல், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.பி.அஸ்காப், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியின், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்திக், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் புருசோத்தமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட திமுக அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, தொகுதி பார்வையாளர்கள் ராஜாகுப்புசாமி, வடசென்னை மனோகரன், திமுக விவசாய அணி துணைச் செயலாளர் ஆதிசேசன், நெசவாளர் அணி துணைத் தலைவர் நாகலிங்கம், மாநில தொண்டர் அணி பயிற்சியாளர் குருதாஸ், மாவட்ட நிர்வாகிகள் குமரன், ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன், மிதுன் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, ஆதாம், கிஷோர், சுப்பிரமணியம், ராஜேஸ்வரி ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முடிவில் திருவள்ளூர் நகரச் செயலாளர். சி.சு.ரவிச்சந்திரன் நன்றி கூறுகிறார். கூட்டத்தில் திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

The post இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,Thiruvallur ,Thiruthani ,MLA ,S. Chandran ,DMK ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...