×

செல்போன்கள் திருட்டு

மாதவரம்: செங்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (30), இவர் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இளையராஜாவின் மனைவி மேரி ஜோஸ்பின் மற்றும் அவரது தங்கை உள்ளிட்டோர் வீட்டின் கதவை தாழிடாமல் படுத்து தூங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு மின்சாரம் தடைபட்ட போது எழுந்து பார்த்தபோது இளையராஜாவின் மனைவி மேரி ஜோஸ்பின் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட 3 பேரின் செல்போன்கள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செல்போன்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Ilayaraja ,Senkunram Gandhinagar ,Mary Josephine ,
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்