×

கர்நாடக மது கடத்தியவர் கைது

 

ஓசூர், மார்ச் 20: ஓசூர் அருகே சூளகிரி தீர்த்தம் சாலையில் கலால் போலீசார், கர்நாடக மதுபான பாட்டில்கள் கடத்திய நபரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தீர்த்தம் சாலை சிவசிகர்லப்பல்லி அருகில் கலால் இன்ஸ்பெக்டர் ஷர்மிளாபானு தலைமையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள, கர்நாடக மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கார் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து காரில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், திருப்பத்தூர் பாட்டாளி நகர் பகுதியை சேர்ந்த வீரமணி (45) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, காரில் இருந்த ₹50 ஆயிரம் மதிப்பிலான, 1200 மது பாட்டிலை கைப்பற்றினர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், ஓசூர் நீதிமன்றத்தில் வீரமணியை ஆஜர்படுத்தி, ஓசூர் சிறையிலடைத்தனர். தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கர்நாடக மது கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Hosur ,Choolagiri Theertham Road ,Krishnagiri District ,Sivasikarlapally ,Dinakaran ,
× RELATED பஸ்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்