×

திண்டுக்கல்லில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மார்ச் 19: ரேஷன் கடைகளில் தேங்காய் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்க செய்யக்கோரி, திண்டுக்கல் நாகல் நகரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், கிழக்கு மாவட்ட செயலாளர் கேசவமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

மாநில பொது செயலாளர் முத்து விசுவநாதன், மாநில துணைப் பொது செயலாளர் நேதாஜி, மதுரை மாவட்ட செயலாளர் காராமணி, மாநில இயற்கை விவசாயிகள் அணி செயலாளர் அலெக்ஸ் உள்பட பலர் விளக்க உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என ேகாரி கோஷங்கள் எழுப்பினர். இதில் மதுரை மாவட்ட அவை தலைவர் தமிழ்ச்செல்வன், விருதுநகர் மாவட்ட செயலாளர் ராமசாமி, தென்னை விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Defense Association ,Dindigul ,Tamil Nadu Farmers' Protection Association ,Nagal Nagar, Dindigul ,Farmers' Protection Association ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...