×

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் பலி

 

விராலிமலை.மார்ச்19: விராலிமலை அருகே கோவில் சென்று வீடு திரும்பும் போது நடந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தார். விராலிமலை அருகேயுள்ள ராஜகிரி குளவாய்பட்டி கூத்தாண்டம்மன் கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் வல்லக்கோன்பட்டி கிராமத்தின் சார்பாக நடைபெற்ற மண்டல அபிஷேகம் விழாவில் பக்தர்கள் சிலர் பங்கேற்றுவிட்டு கடந்த 15 ம் தேதி அதிகாலை லோடு ஆட்டோவில் விராலிமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது காக்காகுடி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர புளியமரத்தில் மோதியது

இதில் ஆட்டோவில் பயணம் செய்த சிறுவர்கள், பெண்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதில் முதலுதவி சிகிச்சைக்கு பின் சிலர் வீடு திரும்பினர். விபத்தில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குளவாய்பட்டியைச் சேர்ந்த நல்லுசாமி மனைவி சின்னம்மாள்(49) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இது குறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை சி படிவத்தில் பூர்த்தி செய்து மொத்தம் 1344 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் குறிப்பாக மார்ச் 17 ம் தேதி மட்டும் 252 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

The post ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Kumbabhishekam ,Rajagiri Kulavaipatti Koothandamman Temple ,Vallakkonpatti ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா