×

பைக் திருடியவருக்கு வலை

நெல்லை, மார்ச் 19: வள்ளியூரில் தென்காசி வாலிபரின் பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் இலத்தூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (29). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி வள்ளியூர் பகுதியில் நடந்த கோயில் கொடை விழாவிற்காக பைக்கில் வந்தார். பின்னர் அவர் பைக்கை அப்பகுதியில் நிறுத்தி விட்டு, அங்குள்ள கடைக்கு சென்றார். ஒரு மணி நேரம் கழித்து அவர் மீண்டும் வந்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வள்ளியூர் போலீசில் பாஸ்கரன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மாயமான பைக்கை தேடி வருகின்றனர்.

The post பைக் திருடியவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Nella ,Tenkasi ,Valliur ,Paskaran ,Latur, Tenkasi District ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...