×

பெண் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சி பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (46). இவரது மனைவி ஜோதி (35). இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 17ம் தேதி இரண்டு பெண் குழந்தைகளும் தலையில் எண்ணெய் வைப்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதை பார்த்ததும், பிரபு, தனது மனைவியிடம், ‘‘குழந்தைகள் தலையில் நீ எண்ணெய் வைக்கக்கூடாதா’’ என கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ஜோதி படுக்கை அறைக்குள் சென்று உட்புறமாக கதவை பூட்டிக் கொண்டார். இதையடுத்து பிரபு மற்றும் அவரது குழந்தைகள் பலமுறை அறையின் கதவை தட்டியும் திறக்காததால், அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து கதவை கடப்பாறையால் உடைத்துச் சென்று பார்த்த போது, ஜோதி மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.

 

The post பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Prabhu ,Padmavathi Nagar ,Thiruthani Union Pattabhiramapuram Panchayat ,Jyoti ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...