×

‘என்‌ ஓட்டு‌ என்‌ உரிமை’ விழிப்புணர்வு பிரசாரம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு: ‘என்‌ ஓட்டு‌ என்‌ உரிமை’ விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ‘என் ஓட்டு என் உரிமை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதேபோன்று‌, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினையும் முதல் கையெழுத்திட்டு கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறையினை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

The post ‘என்‌ ஓட்டு‌ என்‌ உரிமை’ விழிப்புணர்வு பிரசாரம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Chengalpattu ,Arunraj ,En Otu En Arun ,District Election Officer ,'N Otu N Rikaan ,Chengalpattu District Collector ,Rikaan ,Dinakaran ,
× RELATED மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை