×

ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பயிற்சியை முடித்துவிட்டு ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வாகனம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சிஆர்பிஎஃப் வாகனத்தில் பயணம் செய்த 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதில் 2 பேருக்கு கால் சம்பவ இடத்திலேயே துண்டானது. மேலும் படுகாயமடைந்த 2 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ampur ,Tirupathur ,CRPF ,Tirupathur district ,Avadi ,Bangalore, Karnataka ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து சென்ற பெண் ஏட்டு விபத்தில் பலி