×

விழுப்புரம் அருகே லாரி கவிந்து விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி அதிகாலை 5 மணி அளவில் விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் தூக்க கலகத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சாலையின் மறுபுறம் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் இருவழி பாதையிலும் போக்குவரத்து தடைபட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் விழுப்புரம் திருச்சி மார்க்கத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதே போல் சென்னை மார்க்கத்திலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை அடுத்து வாகனங்களை பண்ருட்டி மற்றும் கும்பகோணம் சாலை வழியாக திருப்பி அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து போக்குவரத்து சீரானது.

 

The post விழுப்புரம் அருகே லாரி கவிந்து விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Chennai-Trichy National Highway ,Tuthukudi ,Puducherry ,Janakipuram ,Lorry ,National Highway ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!