×

மக்களவை தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறப்பு!

மக்களவை தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தனி நபரோ, கட்சியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம், இலவச பொருள் விநியோகித்தால் புகார் தெரிவிக்கலாம். தகவல்களை வருமான வரி அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண், மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம். கட்டணமில்லா எண் 1800 425 6669, மின்னஞ்சல் tn.electioncomplaints2024@incometax.gov.in புகார் தெரிவிக்கலாம். 94453 94453 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறப்பு! appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Lok Sabha elections ,Lok Sabha ,Income Tax Office ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...