- புதுவயல்
- காரைக்குடி
- புதுவை பேரூராட்சி
- பேரூராட்சி தலைவர்
- முகமது மீரா
- துணை ஜனாதிபதி
- பக்ருதீன் அலிபாய்
- நிர்வாக அலுவலர்
- உமாமகேஸ்வரன்
- அமுதசுந்தரி
- எமிஜெபராணி
- வாசுகி
- சரண்யா
- நல்லமுத்து
- பேரூராட்சி தலைவர்
- தின மலர்
காரைக்குடி, மார்ச் 17: காரைக்குடி அருகே புதுவயல் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் முகமதுமீரா தலைமை வகித்தார். துணைத்தலைவர் பக்ருதீன்அலிபாய், செயல்அலுவலர் உமாமகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மன்ற உறுப்பினர்கள் ஆராயி, அமுதசுந்தரி, எமிஜெபராணி, வாசுகி, சரண்யா, நல்லமுத்து, செல்வா, அபுபக்கர்சித்திக், பூர்ணிமாதேவி, சாகுல்அமீது, உஷா, நாச்சியப்பன்,ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் முகமதுமீரா பேசுகையில், பேரூராட்சியில் ரூ.5 கோடியே 40 லட்சம் மதிப்பில் கழிவுநீர் மற்றும் கசடு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
வீட்டு கழிவுநீர் மற்றும் வணிகநிறுவனங்களின் கழிவுநீர் குழாய் வழியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம் நகரின் சுற்றுப்புறதூய்மை பாதுகாப்படும். சுத்திகரிக்கப்பட்ட நீர் தோட்டம் உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு ரூ.1 கோடியே 20 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. உமையாள் நகரில் ரூ.35 லட்சத்தில் பூங்கா, 33 லட்சத்தில் தார் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது, என்றார்.
The post புதுவயலில் ரூ.5.40 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: பேரூராட்சி சேர்மன் தகவல் appeared first on Dinakaran.