×

திருவாடானை நீதிமன்றத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு

திருவாடானை, மார்ச் 17: திருவாடானையிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டதை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர். திருவாடானையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்னழுத்த குறைபாடு காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து மின்வாரியத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை நீதிபதிகள் பிரசாத், மனிஷ்குமார் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் சிவராமன், அரசு வழக்கறிஞர் கணேச பிரபு உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவாடானை நீதிமன்றத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvadan Court ,Thiruvadanai ,Thiruvadan ,court ,Dinakaran ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு