×

மத்தியில் ஆட்சி மாற்றம் வந்ததும் கவர்னர் மாளிகையில் ராஜ்ஜியம் நடத்தும் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும்: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: மத்தியில் ஆட்சி மாற்றம் வந்ததும் கவர்னர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்தும் ஆளுநர் ரவியின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டப்படும் என அமைச்சர் ரகுபதி கூறினார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஓட்டேரியில் நேற்று காலை நடந்தது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “மோடி தண்ணீரின் மீது தவமிருந்தாலும் தரையின் மீது தவம் இருந்தாலும் தரையின் மீது இருக்கிற வாகனத்தின் மீது தவமிருந்தாலும் சரி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும்.

இதுதான் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் அளிக்கிற பிறந்தநாள் பரிசு” என்றார். அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில், பொன்முடி அமைச்சராக பதவியேற்க எந்த தடையும் இல்லை. ஆளுநர் பதவி ஏற்பு தொடர்பாக விளக்கம் கேட்டால் சட்டத்துறை சார்பில் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆளுநர் சென்னை திரும்பியதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். துணைவேந்தர்களுக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவி காலம் என்கிற நடைமுறை இருக்கின்ற நிலையில், ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார். பதவி நீடிப்பு வழங்குகிறார். ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும் என்றார்.

The post மத்தியில் ஆட்சி மாற்றம் வந்ததும் கவர்னர் மாளிகையில் ராஜ்ஜியம் நடத்தும் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi Petty ,CHENNAI ,Raghupathi ,Governor ,Ravi ,Governor's House ,DMK ,Chief Minister ,M.K.Stal ,East District ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்