×

பயணிகள் பற்றாக்குறை காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து நேற்று காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, காலை 8.40 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், போதிய பயணிகள் இல்லாததால் நேற்று ரத்து செய்யப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து நேற்று காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, காலை 11 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது. இந்த 2 விமானங்களிலும் முன்பதிவு செய்த ஒரு சில பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்து, அவர்களின் டிக்கெட் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பயணிகள் பற்றாக்குறை காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : SriLankan Airlines ,CHENNAI ,Colombo ,Chennai International Airport ,Dinakaran ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...