×

கனவு காண்பது பாஜ உரிமை: கனிமொழி எம்.பி. பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் கனிமொழி எம்.பி. கூறியதாவது: தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார். இவ்வளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ரூபாய் கூட கொடுத்துள்ளாரா என்று மனசாட்சியோடு பதில் சொல்லட்டும். இதுவரைக்கும் தமிழ்நாட்டிற்கென என்ன செய்துள்ளார்கள்.

நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் சாமானியனுக்கும் இவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள். வேலைவாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை என்றார்.

பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, கனவு காண்பது அவர்களது உரிமை. நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

The post கனவு காண்பது பாஜ உரிமை: கனிமொழி எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Kanimozhi ,Thoothukudi ,Karunkulam ,Karadanganallur ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்