×

மார்ச் 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: பயணிகளுக்கு நிழற்குடை திறப்பு

 

ஊட்டி, மார்ச் 16: ஊட்டியில் மார்ச் 22ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் அருணா கூறியதாவது: ஊட்டி பிங்கர்போஸ் பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 22ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், அக்கோரிக்கைகளை 16ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம்.

தோட்டக்கலை இணை இயக்குநர், தபால்பெட்டி எண்.72, ஊட்டி – 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்வதால், விவசாயம் சம்பந்தமான குறைகள் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post மார்ச் 22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: பயணிகளுக்கு நிழற்குடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Farmers Grievance Day ,Collector ,Aruna ,District Collector ,Office ,Ooty Pingarbos ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...