×

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழி

 

தஞ்சாவூர், மார்ச் 16: தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழி மூடியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மேரீஸ் கார்னர் அருகேயுள்ள பூக்கார மாதா கோவில் தெருவில் பாதாள சாக்கடை குழியில் மூடி இல்லாமல் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குழியில் விழும் அபாயம் உள்ளது. மேலும் இந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விபத்து ஏற்படும் முன்பு திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழியில் மூடியை பொருத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Marys Corner ,Pookkara Mata Kovil street ,Tanjore Mary ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...